ADDED : மே 28, 2026 07:32 PM
அ நிறம் | அளவு
வில்லியனுார்: வில்லியனுார் அருகே ரயில் மோதி முதியவர் இறந்தார்.
வில்லியனுார் அடுத்த கோனேரிக்குப்பத்தை சேர்ந்தவர் ஜானகிராமன், 68; மனநலம் பாதித்த இவர், ஜிப்மரில் சிகிச்சை பெற்று வந்தார்.
நேற்று முன்தினம் மாலை வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் அவரை தேடி வந்தனர். நேற்று முன்தினம் இரவு 11:30 மணியளவில் சங்கராபரணி ஆற்றங்கரை பகுதி ரயில்வே டிராக்கில் அடையாளம் தெரியாத நபர் இறந்துகிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
சம்பவ இடத்திற்கு சென்று முதியவர் உடலை மீட்டனர். விசாரணையில் ரயில் மோதி இறந்தது ஜானகிராமன் என உறுதியானது. புகாரின் பேரில், வில்லியனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
