ADDED : ஏப் 14, 2024 05:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: புது பஸ் நிலையத்தில் இறந்து கிடந்த முதியவர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
புதுச்சேரி, புது பஸ் நிலையம் பி.ஆர்.டி.சி., அலுவலகம் அருகில் 60 வயது மதிக்கத் தக்க நபர் நேற்று மாலை இறந்து கிடந்தார். தகவலறிந்த உருளையான்பேட்டை போலீசார் சடலத்தை மீட்டு அரசு மருத்துவனைக்கு அனுப்பினர்.
இது குறித்து வழக்குப்பதிந்து இறந்தவர் யார், அவர் இறப்புக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

