ADDED : மே 25, 2026 07:41 PM
காரைக்கால்.மே 26 -: காரைக்காலில் கடன் பிரச்னையால் பெருமாள் கோவில் மண்டபத்தில் துாக்கு போட்டு எலெக்ட்ரிசியன் தற்கொலை செய்துகொண்டார்.
காரைக்கால் திருப்பட்டினம் வரதராஜ பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த ஜெகநாதன், 54; இவர் எலக்ட்ரீஷியன். இவர் தற்போது விழி வரதராஜ பெருமாள் கோவிலில் பணியாற்றி வருகிறார். தனது மனைவியிடம் கடன் சுமை அதிகமாக உள்ளதால் மன வேதனை காணப்பட்டு கூறியுள்ளார். இந்நிலையில் நேற்று ஜெகநாதன் கோவில் மண்டபம் அறையில் துாக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். பின்னர் காலை பணிக்கு சென்றவர் ஜெகநாதன் தற்கொலை செய்த குறித்து திருப்பட்டினம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்தனர்.
தகவல் அறிந்த போலீசார் அவரது உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை செய்துவருகின்றனர்.
