ADDED : ஜூன் 07, 2026 07:20 PM

அ நிறம் | அளவு
புதுச்சேரி: சிறப்பாக சுற்றுச்சூழல் பணி செய்ததையொட்டி, தனசுந்தராம்பாள் சாரிட்டபுள் சொசைட்டிக்கு சிறந்த விருது வழங்கப்பட்டது.
புதுச்சேரி அறிவியல் சுற்றுச்சூழல் துறை மற்றும் மாசு கட்டுப்பாடு குழுமம் ஆகியன சார்பில், உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்பட்டது. சிறப்பு விருந்தினராக கவர்னர் கைலாஷ்நாதன் பங்கேற்றார். விக்னேஷ் எம்.எல்.ஏ., முன்னிலை வகித்தார்.
சிறப்பான முறையில் சுற்றுச்சூழல் பணி செய்ததற்காக, தவளக்குப்பம் அடுத்த பூரணாங்குப்பம் தனசுந்தராம்பாள் சாரிட்டபுள் சொசைட்டி நிறுவனர் ஆனந்தனை கவர்னர் பாராட்டி, அவருக்கு சிறந்த விருது வழங்கி கவுரவித்தார்.
நிகழ்ச்சியில் சுற்றுச்சூழல் துறை செயலர் சுமிதா, தலைமை செயலர் சரத் சவுகான், பொறியாளர் ரமேஷ் உட்பட சுற்றுச்சூழல் அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
