/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
குதிரையேற்ற போட்டி ஆரோவில்லில் துவக்கம்
/
குதிரையேற்ற போட்டி ஆரோவில்லில் துவக்கம்
ADDED : மார் 30, 2024 06:49 AM
புதுச்சேரி : ஆரோவில் ரெட் எர்த் குதிரை பயிற்சி பள்ளியில் 25ம் ஆண்டு குதியேற்ற போட்டி நேற்று துவங்கியது.
இதில், 20க்கும் மேற்பட்ட கிளப்புகளில் இருந்து 120 குதிரைகளும், புதுச்சேரியைச் சேர்ந்த 40 குதிரைகள் பங்கேற்றுள்ளது.
தினமும் காலை 6:30 மணி முதல் காலை 11:00 மணி வரையும், மாலை 3:30 மணி முதல் 6:00 மணி வரை போட்டிகள் நடக்கிறது.
பெங்களூரு, கோயம்புத்துார், சென்னை, ஹைதராபாத், திருப்பூர் உள்ளிட்ட பகுதியில் இருந்து 140 வீரர்கள் பங்கேற்கின்றனர்.
குதிரைகள் நடைபயிற்சி, ஜம்பிங், சீனியர், ஜூனியர், சிறுவர் என பல பிரிவுகளில் போட்டி நடந்து வருகிறது.
முதல் நாளான நேற்று குதிரை டிரஸ்சாஜ் பிரி வின் கீழ் போட்டிகள் நடந்தது. இதில், குறைந்த நேரத்தில் பிழையின்றி தடைகளை தாண்டி செல் வோருக்கு புள்ளிகள் வழங்கப்பட்டது.
அதிக புள்ளிகள் பெற்று வெற்றி பெற்ற குதிரை வீரரருக்கு 31ம் தேதி பரிசுகள் வழங்கப்பட உள்ளது.

