கோவில் திருப்பணிக்காக ரூ.1 லட்சம் முன்னாள் சபாநாயகர் வழங்கல்
கோவில் திருப்பணிக்காக ரூ.1 லட்சம் முன்னாள் சபாநாயகர் வழங்கல்
ADDED : செப் 14, 2024 06:12 AM

அ நிறம் | அளவு
புதுச்சேரி: பெத்துசெட்டிப்பேட்டை பூஞ்சோலை மாரியம்மன் கோவிலின் திருப்பணி மற்றும் கும்பாபிஷேக பணிகளுக்கு ரூ.1 லட்சம் நிதியை முன்னாள் சபாநாயகர் சிவகொழுந்து கோவில் நிவாகிகளிடம் வழங்கினார்.
லாஸ்பேட்டை அடுத்த பெத்துசெட்டிப்பேட்டை பூஞ்சோலை மாரியம்மன் கோவில் கும்பாபிேஷக திருப்பணிக்கு முன்னாள் சபாநாயகர் சிவகொழுந்து தனது சொந்த நிதியில் இருந்து ஏற்கனவே 2 லட்சம் வழங்கினார். அந்த பணிக்காக மேலும், 1 லட்சம் நிதியை கோவில் நிர்வாகிகளிடம் நேற்று அவர் வழங்கினார்.
அப்போது, கலியபெருமாள், கார்த்தி, வெங்கடேசன், ராஜேஷ், ரமேஷ், சுப்ரமணி, வெங்கடேஷ், மணி, வீரமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
