கள்ளக்குறிச்சி : கடலுார் மாவட்டம், திட்டக்குடி அடுத்த கோவிலுாரை சேர்ந்தவர் வேல்முருகன் மனைவி புவனேஸ் வரி, 28; கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் காதல் திருமணம் செய்து கொண்டனர்.
பின், இருவரும் வேலைக் காக துபாய்க்கு சென்றனர். அங்கு வேல்முருகனுக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதனையறிந்த புவனேஸ்வரி கணவரை கண்டித்துள்ளார்.
இதனால், வேல்முருகன் தனது மனைவி புவனேஸ்வரியை அடித்து துன்புறுத்தி அங்கிருந்து சொந்த ஊருக்கு அனுப்பி வைத்துள்ளார்.
கடந்த மாதம் 27ம் தேதி சொந்த ஊரான கள்ளக்குறிச்சி மாவட்டம், அசகளத்துார் வந்த புவனேஸ்வரி, துபாயில் நடந்த சம்பவத்தை தனது சகோதரர் மதியழகனிடம் கூறினார்.
மேலும் மனமுடைந்த நிலையில் இருந்த புவனேஸ்வரி, கடந்த 6ம் தேதி எலி பேஸ்ட் தின்றார். சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர் நேற்று இறந்தார்.
புகாரின் பேரில் வரஞ்சரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

