ADDED : மார் 10, 2025 06:20 AM

புதுச்சேரி: புதுச்சேரி அரசு வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை, ஆத்மா திட்டத்தின் சார்பில் மதகடிப்பட்டு பண்ணைத் தகவல் மற்றும் ஆலோசனை மையத்தில் வயல் தின விழா மற்றும் மகளிர் தின விழா நடந்தது.
வேளாண் அதிகாரி நடராஜன் தலைமை தாங்கினார். துணை வேளாண் இயக்குனர் சாந்தி பால்ராஜ் வரவேற்றார். வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை இயக்குனர் வசந்தகுமார் விழாவினை துவக்கி வைத்து, உலக அளவில் பெண்களின் வளர்ச்சி மற்றும் விவசாயத்தில் பெண்களின் இன்றியமையாத நிலை குறித்து பேசினார்.
கூடுதல் வேளாண் இயக்குனர் சாகீர் உசேன் தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டங்களின் புதிய தொழில்நுட்பங்களை விளக்கினார். காரைக்கால் வேளாண் ஆராய்ச்சி நிலைய முதல்வர் ரவி ஏ.டி.டி., - 54 நெல் ரகம் குறித்து விளக்கம் அளித்தார்.
ஆத்மா திட்ட துணை இயக்குனர் கலைச்செல்வி, விவசாயத்தில் பெண்களின் முக்கியத்துவம் குறித்தும், துணை வேளாண் இயக்குனர் குமாரவேலு இயற்கை வேளாண்மை குறித்தும் பேசினர்.
விவசாயிகளுக்கு நினைவுப் பரிசுகள், மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.
வேளாண் அலுவலர்கள் வினோத் கண்ணன், சங்கரதாஸ், பரமநாதன், சத்யன், புவனேஸ்வரி, உமாராணி உட்பட பலர் பங்கேற்றனர்.
விழாவில், மதகடிப்பட்டு, கலிதீர்த்தாள்குப்பம், திருபுவனை, திருவாண்டார்கோவில், சன்னியாசிக்குப்பம், வாதானுார் கிராம விவசாயிகள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை உதவி வேளாண் அலுவலர்கள் பக்கிரி, புவனேஷ்வரி செயல்விளக்க உதவியாளர் ஜெயசங்கர், அலுவலக ஊழியர்கள் சண்முகம், சுபாஷ் ஆகியோர் செய்திருந்தனர். ஆத்மா தொழில்நுட்ப மேலாளர் சிரஞ்சீவி நன்றி கூறினார்.