sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

களத்தில் சுகாதாரத்துறை 

/

களத்தில் சுகாதாரத்துறை 

களத்தில் சுகாதாரத்துறை 

களத்தில் சுகாதாரத்துறை 


ADDED : ஜூன் 12, 2024 03:07 AM

Google News

ADDED : ஜூன் 12, 2024 03:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : ரெட்டியார்பாளையத்தில் விஷவாயு தாக்கி உயிரிழந்த புது நகரில் சுகாதாரத்துறை களத்தில் இறங்கி தீவிர நடவடிக்கை மேற்கொண்டது.

ரெட்டியார்பாளையம் புதுநகரில் விஷவாயு தாக்கி 3 பேர் உயிரிழந்த தகவல் அறிந்ததும், சுகாதாரத்துறை இயக்குநர் ஸ்ரீராமலு தலைமையிலான டாக்டர் குழுவினர் புதுநகருக்கு விரைந்தனர். 20 பேர் கொண்ட மருத்துவ குழுவினர், புது நகரில் வேறு யாருக்கேனும் மூச்சு திணறல் இருந்தால் உடனடியாக சிகிச்சை பெற வரும்படி அழைப்பு விடுத்தனர்.

களப்பணியாளர்கள் வீடு வீடாக சென்று உடல் நலம் குறித்து கேட்டறிந்ததுடன், முக கவசம் அணியும்படி அறிவுறுத்தினர்.

சுகாதாரத்துறை இயக்குநர் ஸ்ரீராமலு கூறுகையில், 'கழிவறை பாதாள சாக்கடையில் நச்சு காற்றுகள் கார்பன்மோனாக்சைடு, நைட்ரஜன் சல்பைடு, மீதேன் வெளியேறினால் கழிவறைக்குகள் ஆக்சிஜன் குறைந்து விடும். அதை சுவாசிக்கும்போது, நினைவு இழப்பு, மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படும்.

விஷவாயு தாக்கம் குறித்து ஆய்வு செய்து வருகின்றனர். 3 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மற்ற 2 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

டாய்லெட்டில் இருந்து நேரடியாக பாதாள சாக்கடையில் இணைப்பு கொடுத்து இருந்தால், இதுபோன்ற விஷவாயு வெளியேறி இருக்கலாம் என தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us