ADDED : ஜூன் 10, 2026 09:02 PM
அ நிறம் | அளவு
சிதம்பரம்: சிதம்பரத்தில் மாணவர்களை அழைத்து சென்றபோது, தனியார் பள்ளி வாகனத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கடலுார் மாவட்டம், சிதம்பரம் பைபாஸ் சாலையில் உள்ள தனியார் பள்ளிக்குச் சொந்தமான வேன் ஒன்று, நேற்று 10 க்கும் மேற்பட்ட மேற்பட்ட மாணவர்களை ஏற்றிக்கொண்டு பள்ளிப்படை அருகே சென்றுகொண்டிருந்தது . அப்போது திடீரென வேனின் முன்புறம் இன்ஜினில் ஒயர்கள் திடீரென தீப்பிடித்து புகை வந்தது. வேனுக்குள் புகை ஏற்பட்டதால் ‘திடீர்’ பரபரப்பு ஏற்பட்டது. அதையடுத்து, உடனடியாக டிரைவர் வேனை நிறுத்தி உள்ளே இருந்த மாணவர்களை அவரசர அவசரமாக கீழே இறக்கினார். பின்னர், வேனில் தண்ணீர் பீய்ச்சி தீ விபத்து தடுக்கப்பட்டது. இந்த விபத்தில் யாருக்கும் இல்லை.
இச்சம்பவத்தால் அப்பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
