/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சாராயக்கடையில் மீனவர் மர்ம சாவு
/
சாராயக்கடையில் மீனவர் மர்ம சாவு
ADDED : மே 12, 2024 05:17 AM
காரைக்கால்: காரைக்கால் சாராயக்கடையில் மீனவர் மர்மமான முறையில் இறந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி, சின்னங்குடி சுனாமி நகரை சேர்ந்தவர் சசிகுமார், 47; மீனவர். .இவரது மனைவி இந்திரா. இவர்களுக்கு இருபிள்ளைகள் உள்ளனர். நேற்று முன்தினம் கடற்கரைக்கு வலை சரிசெய்ய செல்லுவதாக கூறிவிட்டு சென்ற சசிகுமார் காரைக்கால் பூவம் சாராயக்கடையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
தகவல் அறிந்த கோட்டுச்சேரி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவரது உடலை மீட்டு, அரசு மருந்துவமனைக்கு அனுப்பினர். இது குறித்து போலீசார் வழக்குப் பதிந்து சசிகுமாரின் இறப்புக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.