sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

சந்தன கட்டை பறிமுதல் வழக்கு சி.பி.ஐ.,க்கு மாற்ற வேண்டும் மாஜி முதல்வர் நாராயணசாமி கோரிக்கை

/

சந்தன கட்டை பறிமுதல் வழக்கு சி.பி.ஐ.,க்கு மாற்ற வேண்டும் மாஜி முதல்வர் நாராயணசாமி கோரிக்கை

சந்தன கட்டை பறிமுதல் வழக்கு சி.பி.ஐ.,க்கு மாற்ற வேண்டும் மாஜி முதல்வர் நாராயணசாமி கோரிக்கை

சந்தன கட்டை பறிமுதல் வழக்கு சி.பி.ஐ.,க்கு மாற்ற வேண்டும் மாஜி முதல்வர் நாராயணசாமி கோரிக்கை


ADDED : ஜூன் 18, 2024 04:39 AM

Google News

ADDED : ஜூன் 18, 2024 04:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: புதுச்சேரியில் சந்தன கட்டை, சந்தன மரத்துாள் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கை சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்ற வேண்டும் என முன்னாள் முதல்வர் நாராயணசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து, அவர் அளித்த பேட்டி:

புதுச்சேரியில் இருந்து 6.2 டன் சந்தனக் கட்டை, சந்தன மரத்துாள் தமிழக வனத்துறையால் கையகப்படுத்தப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட நிறுவனம் உரிய அனுமதி பெற்றுள்ளதா என்பதை அரசு தெரிவிக்க வேண்டும். இதில் கேரளா, தமிழகம், புதுச்சேரி ஆகிய 3 மாநிலங்கள் சம்பந்தப்பட்டுள்ளதால் சி.பி.ஐ., விசாரணைக்கு வழக்கை மாற்ற வேண்டும் .

இதில் எங்களுக்கு சம்பந்தம் இல்லை என்று சொல்லி புதுச்சேரி அரசு தட்டி கழிக்க முடியாது. ஏனென்றால் புதுச்சேரியில் தான் சந்தன ஆயில் தயாரிப்பு தொழிற்சாலை செயல்பட்டுள்ளது. எத்தனை டன் சந்தனக் கட்டைகள், துாள்கள் பிற மாநிலங்களில் இருந்து புதுச்சேரிக்கு கொண்டு வரப்பட்டுள்ளது என்பதை எல்லாம் விசாரிக்க வேண்டும்.

இதுதொடர்பான தெளிவான அறிக்கையை புதுச்சேரி மக்கள் மத்தியில் அரசு வெளியிட வேண்டும். இந்த தொழிற்சாலை பதிவு செய்யப்பட்டுள்ளதா, சந்தன ஆயில் எடுக்க அனுமதி கொடுக்கப்பட்டுள்ளதா என்ற விளக்கம் மக்களுக்கு தெரிய வேண்டும். ஒரு அமைச்சரின் மகளுக்கு சொந்தமான இடம் என்பதால் இந்த பிரச்னை பெரியதாகியுள்ளது. உரிய அனுமதி பெற்றதால் தான் அனுமதி கொடுத்திருக்க வேண்டும்.

தமிழக அரசுடன் பேசி இவ்விவகாரத்தில் சி.பி.ஐ.,விசாரணைக்கு புதுச்சேரி அரசு பரிந்துரை செய்யவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us