/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
முன்னாள் பிரதமர் நேரு நினைவு நாள் அமைச்சர்கள் எம்.எல்.ஏ.க்கள் மாலை அணிவிப்பு
/
முன்னாள் பிரதமர் நேரு நினைவு நாள் அமைச்சர்கள் எம்.எல்.ஏ.க்கள் மாலை அணிவிப்பு
முன்னாள் பிரதமர் நேரு நினைவு நாள் அமைச்சர்கள் எம்.எல்.ஏ.க்கள் மாலை அணிவிப்பு
முன்னாள் பிரதமர் நேரு நினைவு நாள் அமைச்சர்கள் எம்.எல்.ஏ.க்கள் மாலை அணிவிப்பு
ADDED : மே 28, 2024 04:07 AM

புதுச்சேரி : முன்னாள் பிரதமர் ஜவகர்லால் நேரு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. அரசு சார்பில் புதுச்சேரி கடற்கரை காந்தி திடலில் உள்ள அவரது சிலைக்கு அமைச்சர்கள் லட்சுமிநாராயணன், ஜெயக்குமார், துணை சபாநாயகர் ராஜவேலு, அரசு கொறடா ஆறுமுகம், எம்.எல்.ஏ.க்கள் பாஸ்கர், லட்சுமிகாந்தன், செய்தி விளம்பரத்துறை இயக்குநர் தமிழ்செல்வன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
காங்., கட்சி சார்பில் மாநில காங்., கட்சி தலைவர் வைத்திலிங்கம் எம்.பி., முன்னாள் முதல்வர் நாராயணசாமி, வைத்தியநாதன் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் கந்தசாமி, முன்னாள் எம்.எல்.ஏ., அனந்தராமன், சீனியர் காங்., துணை தலைவர் தேவதாஸ் உள்ளிட்டோர் நேரு சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அதுபோல் காங்., கட்சி அலுவலகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த நேரு படத்திற்கும் மலர் துாவி மரியாதை செலுத்தினர்.