sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 10, 2026 ,தை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

ஏலச் சீட்டு நடத்தி பணம் மோசடி

/

ஏலச் சீட்டு நடத்தி பணம் மோசடி

ஏலச் சீட்டு நடத்தி பணம் மோசடி

ஏலச் சீட்டு நடத்தி பணம் மோசடி


ADDED : மே 14, 2024 05:02 AM

Google News

ADDED : மே 14, 2024 05:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரியாங்குப்பம்: ஏலச் சீட்டு பணம் தராமல் ஏமாற்றிய தம்பதியினரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

முதலியார்பேட்டை அடுத்த வேல்ராம்பட்டு திருமகள் நகரை சேர்ந்தவர் சுவாதி, 24; புதுச்சேரி தனியார் மருத்துவமனையில் பேராசிரியராக பணி செய்து வருகிறார். இவரது வீட்டில் வாடகைக்கு குடியிருக்கும் கோமதி, அவரது கணவர் கவுதம் இருவரும் மாத ஏலச் சீட்டு பிடித்தனர். அதில், சுவாதி, அவரது தாய் இருவரும் தனித்தனியாக ஏலச் சீட்டில் சேர்ந்து பணம் கட்டியுள்ளனர்.

இந்நிலையில், கணவன், மனைவி, குடியிருந்த வீட்டை காலி செய்து அருகில் உள்ள நகருக்கு சென்றுள்ளனர். சுவாதி தான் எடுத்த சீட்டு பணம் 10 லட்சம் ரூபாயை, கோமதியின் வீட்டுக்கு சென்று தொடர்ந்து, கேட்டு வந்தார். சீட்டு பணம் தராமல் பலர் ஏமாற்றியுள்ளதாக அவரிடம் கூறினார். இதுகுறித்து, நேற்று சுவாதி, முதலியார்பேட்டை போலீசில் சீட்டு பணத்தை தராமல் ஏமாற்றிய கணவன், மனைவி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். என புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிந்து கணவன், மனைவியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us