/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
காற்றில் பறக்கும் இலவம் பஞ்சு: வாகன ஓட்டிகள் அவதி
/
காற்றில் பறக்கும் இலவம் பஞ்சு: வாகன ஓட்டிகள் அவதி
ADDED : மே 08, 2024 03:50 AM

பாகூர் : பாகூர் - பிள்ளையார்குப்பம் சாலையில் காற்றில் பறக்கும் இலவம் பஞ்சுகளால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
பாகூரில் இருந்து பின்னாட்சிக்குப்பம் வழியாக பிள்ளையார்குப்பம் செல்லும் சாலையில் தினமும் ஏராளமனோர் வாகனங்களில் சென்று வருகின்றனர். இங்குள்ள, சார்காசிமேடு சுடுகாடு சாலை சந்திப்பு அருகே சாலையோரம் உள்ள ஒரு இலவம் பஞ்சு மரத்தில் இருந்து காய்கள் வெடித்து அதிலிருந்து பஞ்சுகள் காற்றில் பறந்து வருகிறது.
அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகளின் கண்களிலும், முக்கு மற்றும் வாய் வழியாக சுவாசக் குழாய்கள் செல்கிறது.
இதனால், அவ்வழியாக செல்லும் பொது மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருவது மட்டுமின்றி சில நேரங்களில் விபத்தில் சிக்கி வருகின்றனர்.
எனவே, காற்றில் பறக்கும் இலவம் பஞ்சுகளின் மீது தண்ணீர் தெளித்து, அதனை காற்றில் பறக்க விடாமல் தடுத்திட அரசு நடவடிக்கை வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

