/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரி நகராட்சி மேரி கட்டடத்தில் 12 ஆண்டுகளுக்கு பிறகு பிரெஞ்சு திருமண பதிவு
/
புதுச்சேரி நகராட்சி மேரி கட்டடத்தில் 12 ஆண்டுகளுக்கு பிறகு பிரெஞ்சு திருமண பதிவு
புதுச்சேரி நகராட்சி மேரி கட்டடத்தில் 12 ஆண்டுகளுக்கு பிறகு பிரெஞ்சு திருமண பதிவு
புதுச்சேரி நகராட்சி மேரி கட்டடத்தில் 12 ஆண்டுகளுக்கு பிறகு பிரெஞ்சு திருமண பதிவு
ADDED : ஜூன் 25, 2024 05:31 AM

புதுச்சேரி: மேரி கட்டடத்தில் 12 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பிரெஞ்சு திருமண பதிவு செய்யப்பட்டது.
புதுச்சேரி கடற்கரையில் அமைந்திருந்த மேரி கட்டடம் மிக பழமை வாய்ந்தது. இக்கட்டடம், கடந்த 1870--71ம் ஆண்டுகளில் பிரெஞ்சு ஆட்சியின்போது, பிரெஞ்சு கட்டடக் கலை நயத்துடன் கட்டப்பட்டது. இந்த பிரமாண்ட கட்டடத்தில் புதுச்சேரி நகராட்சி அலுவலகம் இயங்கி வந்தது. இங்கு பிரெஞ்சு பதிவு திருமணங்களும் நடந்து, பதிவு செய்யப்பட்டு வந்தது.
ஆனால் போதிய பராமரிப்பு இல்லாததால் கட்டடம் பழுதடைந்தது. கடந்த 2014ம் ஆண்டு கட்டடம் இடிந்து விழுந்து தரைமட்டமானது.
மேரி கட்டடம் அதே கலைநயத்துடன் மீண்டும் கட்டும் பணி கடந்த 2017 ம் ஆண்டு 14.83 கோடியில் துவங்கியது. இதன் காரணமாக பிரெஞ்சு திருமணங்கள் வேறு எங்காவது நடந்து முதலியார்பேட்டை நகராட்சி அலுவலகத்தில் திருமண பதிவு மட்டுமே நடந்தது.
இப்போது மேரி கட்டடம் மீண்டும் புதுச்சேரி நகராட்சி வசம் வந்துள்ள சூழ்நிலையில், 12 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பிரெஞ்சு திருமண பதிவு செய்யப்பட்டது. இதனை பார்வையிட்ட புதுச்சேரி நகராட்சி ஆணையர் கந்தசாமி பிரெஞ்சு பதிவு முறையில் திருமணம் செய்த தம்பதிக்கு வாழ்த்து தெரிவித்தார்.
பிரெஞ்சு குடியுரிமையுள்ளவர்கள் மேரி கட்டடத்தில் திருமண செய்ய தற்போது, 25 ஆயிரம் ரூபாய் கட்டணம், போட்டோ சூட், இதர வரி, சேவைகள் என 50,500 ரூபாய் வரை வசூலிக்கப்படுகின்றது. அடுத்து மேரி கட்டடத்திலேயே திருமணம் செய்ய கட்டணமும் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.