ADDED : ஆக 19, 2024 05:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: எலிபேஸ்ட் சாப்பிட்டு பெண் பரிதாபமாக இறந்தார்.
மேட்டுப்பாளையம், சண்முகாபுரம் ராம் நகரைச் சேர்ந்தவர் சுகுமார். இவரது மனைவி புவனேஸ்வரி, 45. இவர்களுக்கு 2 பெண் பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு, பின் சமாதானம் ஆகிவிடுவர்.
கடந்த 13ம் தேதி அவர்களுக்குள் மீண்டும் தகராறு வந்தது. விரக்தியடைந்த புவனேஸ்வரி எலிபேஸ்ட் சாப்பிட்டு மயங்கி விழுந்தார்.
சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார்.
அவரது கணவர் சுகுமார் கொடுத்த புகாரின் பேரில், மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.