ADDED : ஏப் 28, 2024 04:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிதம்பரம் : சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
சிதம்பரம் அடுத்த கிள்ளை பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன் மகன் கார்த்திக்,22; இவர் 15 வயது சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி பழகியதில், சிறுமி கர்ப்பமடைந்தார். இதையடுத்து உறவினர்கள், கடந்த ஜனவரி 4ம் தேதி இருவருக்கும் கோவிலில் திருமணம் செய்து வைத்தனர்.
இதுகுறித்து தகவலறிந்த சிதம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலைய சப்இன்ஸ்பெக்டர் பூவழகி விசாரணை நடத்தி, சிறுமியை கர்ப்பமாக்கிய கார்த்திக் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிந்து அவரை கைது செய்தனர்.

