/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அங்காளபரமேஸ்வரி கோவிலில் மயானக்கொள்ளை
/
அங்காளபரமேஸ்வரி கோவிலில் மயானக்கொள்ளை
ADDED : ஏப் 01, 2024 06:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெட்டப்பாக்கம், : கரையாம்புத்துார் அங்காளபரமேஸ்வரி கோவிலில் மயானக்கொள்ளை விழா நடந்தது.
கரையாம்புத்துார் மெயின் ரோட்டில் உள்ள அங்காளபரமேஸ்வரி கோவிலில் மயானக்கொள்ளை விழா நேற்று காலை 7.00 மணிக்கு விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கியது.
அதனைத்தொடர்ந்து 9.00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிேஷகம் ஆராதனைகள் நடந்தது. மாலை 4.00மணிக்கு மயானக் கொள்ளை விழா நடந்தது. இதில் ஏரளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இரவு 9.00 மணிக்கு அம்மன் வீதியுலா நடந்தது.
ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

