/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீஸ் நிலையத்தில் குறைதீர் கூட்டம்
/
கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீஸ் நிலையத்தில் குறைதீர் கூட்டம்
கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீஸ் நிலையத்தில் குறைதீர் கூட்டம்
கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீஸ் நிலையத்தில் குறைதீர் கூட்டம்
ADDED : மார் 03, 2025 03:54 AM

பாகூர் : கிருமாம்பாக்கம் தெற்கு போக்குவரத்து போலீஸ் நிலையத்தில், மக்கள் குறைதீர் நாள் கூட்டம் நடந்தது.
இன்ஸ்பெக்டர் தன்வந்திரி, சப் இன்ஸ்பெக்டர்கள் பாஸ்கரன், இருதயநாதன் பங்கேற்று, பொது மக்களிடம் குறைகளை கேட்டறிந்தனர். பொது மக்கள், ஆட்டோ ஓட்டுனர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு, தங்கள் பகுதி குறைகளை தெரிவித்தனர். அதில், புதுச்சேரி-கடலுார் சாலையில், முக்கிய சந்திப்புகளில் போலீசாரை நியமித்து, போக்குவரத்தை ஒழுங்கு படுத்த வேண்டும். விபத்து ஏற்படுத்தும் அடையாளம் தெரியாத வாகனங்களை கண்டறிந்து வழக்கை முடித்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு பெற்று தர வேண்டும்.
அதிவேக வாகன ஓட்டிகளின் மீதும், அதிக ஒலி எழுப்ப கூடிய ஏர் ஹாரன்கள், விதிமீறிய சைலன்ஸர் பொறுத்தப்பட்ட வாகனங்களின் மீதும், நடவடிக்கை எடுக்க வேண்டும், என்பது உள்ளிட்ட பல்வேறு புகார்களை தெரிவித்தனர். இது தொடர்பாக, உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்த போலீசார், தலைக்கவசம் அணிவது, சாலை விதிகள் குறித்தும், பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.