/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கைவினை பொருட்கள் கண்காட்சி துவக்க விழா
/
கைவினை பொருட்கள் கண்காட்சி துவக்க விழா
ADDED : பிப் 22, 2025 04:58 AM

புதுச்சேரி: புதுச்சேரி கைவினை கவுன்சில் மற்றும் இந்திய கைவினை கவுன்சில் ஆகியன சார்பில், கைவினை பொருட்கள் விற்பனை கண்காட்சி துவக்க விழா காந்தி திடல் அருகே உள்ள விற்பனை கூடத்தில் நேற்று நடந்தது.
சிறப்பு விருந்தினராக முதல்வர் ரங்கசாமி கலந்துகொண்டு கண்காட்சியை திறந்து வைத்து குத்து விளக்கேற்றி வைத்து பார்வையிட்டார்.
கைவினை பஜாரில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மத்திய அரசின் விருதுகள் பெற்ற கைவினை கலைஞர்களால் உருவாக்கப்பட்ட பொருட்கள், கைத்தறி, வீட்டு அலங்கார பொருட்கள் உள்ளிட்டவை விற்பனைக்கு வைத்துள்ளனர்.
கண்காட்சி இன்று மற்றும் நாளை காலை 9:30 மணி முதல் இரவு 9:30 மணி வரை நடக்கிறது. இதற்கான அனுமதி இலவசம்.

