/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மருத்துவமனை ஊழியரின் பைக், மொபைல் போன் திருட்டு
/
மருத்துவமனை ஊழியரின் பைக், மொபைல் போன் திருட்டு
ADDED : ஜூன் 12, 2024 11:45 PM
புதுச்சேரி : தனியார் மருத்துவமனை ஊழியர் பைக்கை திருடிய மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
மரக்காணம் அடுத்த கீழ்புத்துப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் பாலசுந்தர், 32; தனியார் மருத்துவமனை ஊழியர். இவர் கடந்த 9ம் தேதி இரவு தனது பைக்கில், (பி.ஒய்.01.ஆர்.4993) சென்று காலப்பட்டில் உள்ள தனியார் ரிசார்ட்டில் வரவேற்பு விழாவில் கலந்து கொண்டார். நிகழ்ச்சி முடிந்து வீட்டிற்கு செல்லும் போது இரவு 9:40 மணியளவில் திடீரென மயக்கம் வரவே, காலப்பட்டு அரசு பள்ளி எதிரில் பைக்கை நிறுத்தி சாலையோரம் ஒய்வு எடுத்தார். எழுந்து பார்த்தபோது அவரது பைக், மொபைல் போனை மர்ம நபர்கள் திருடிச்சென்றுள்ளது தெரிந்தது.
பாலசுந்தர் புகாரின்பேரில் காலப்பட்டு போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.