sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

வீடு புகுந்து நகை,பணம் கொள்ளை

/

வீடு புகுந்து நகை,பணம் கொள்ளை

வீடு புகுந்து நகை,பணம் கொள்ளை

வீடு புகுந்து நகை,பணம் கொள்ளை


ADDED : ஜூலை 17, 2024 06:18 AM

Google News

ADDED : ஜூலை 17, 2024 06:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருபுவனை : வீட்டின் கதவை உடைத்து ரூ.50 ஆயிரம் மதிப்புடைய நகை மற்றும் பணத்தைத் கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.

புதுச்சேரி திருபுவனை அடுத்த கொத்தபுரிநத்தம் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் பாலக்கிருஷ்ணன், மனைவி கருணாவதி 63; இவரது கணவர் இறந்த நிலையில், இவரது மகள் மலரின் மகனான, பிரதீப் 23; பராமரிப்பில் வசித்து வருகின்றார்.

கருணாவதிக்கு கடந்த 5ம் தேதி உடல் நிலை பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள மருத்துவமைனயில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். பேரன் பிரதீப் கடந்த 11ம் தேதி, பண்ருட்டியில் நடந்த உறவினர் திருமணத்திற்கு சென்று நேற்று முன்தினம் 15ம் தேதி காலை வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வீட்டின் பின்பக்க கதவு மற்றும் பீரோ உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

உடன் கருணாவதிக்கு தகவல் தெரிவித்து,அவர் வந்து பார்த்தபோது பீரோவில் இருந்து 6 தங்க கிராம் நகைகள், 40 கிராம் வெள்ளி பொருட்கள் மற்றும் ரூ.10 ஆயிரம் ரொக்கத்தை கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது.

கருணாவதி புகாரின் பேரில் திருபுவனை போலீசார் வழக்குப் பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us