sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

சிறுபாக்கத்தில் பைக் மீது கார் மோதல் கணவன், மனைவி பரிதாப பலி

/

சிறுபாக்கத்தில் பைக் மீது கார் மோதல் கணவன், மனைவி பரிதாப பலி

சிறுபாக்கத்தில் பைக் மீது கார் மோதல் கணவன், மனைவி பரிதாப பலி

சிறுபாக்கத்தில் பைக் மீது கார் மோதல் கணவன், மனைவி பரிதாப பலி


ADDED : ஏப் 08, 2024 05:16 AM

Google News

ADDED : ஏப் 08, 2024 05:16 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இரண்டு வயது குழந்தை காயத்துடன் தப்பியது

சிறுபாக்கம்: சிறுபாக்கம் அருகே கார் மோதிய விபத்தில், பைக்கில் சென்ற கணவன், மனைவி பரிதாபமாக உயிரிழந்தனர். இரண்டு வயது குழந்தை காயத்துடன் தப்பியது.

கடலுார் மாவட்டம், சிறுபாக்கம் அடுத்த கொளவாய் கிராமத்தை சேர்ந்தவர் ராஜதுரை, 29; அவரது மனைவி மதுமதி, 25; இவர்களுக்கு இரண்டு வயதில் புகழ் என்ற மகன் உள்ளார். இந்நிலையில், மதுமதி 4 மாத கர்ப்பிணியாக இருந்ததால், நேற்று காலை மனைவியை மருத்துவமனையில் பரிசோதனைக்காக, ராஜதுரை அழைத்து சென்றார். பைக்கில் மனைவி மற்றும் மகன் புகழ் ஆகியோர் சென்றனர்.

சேலம் - விருத்தாசலம் சாலையில், சிறுபாக்கம் அடுத்த அ.களத்துார் பஸ் நிறுத்தம் அருகே காலை 9:45 மணியளவில் சென்றபோது, பின்னால் வேகமாக வந்த மகேந்திரா கார், ராஜதுரை சென்ற பைக் மீது மோதியது.

விபத்தில் ராஜதுரை, அவரது மனைவி மதுமதி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்த குழந்தை புகழை, வேப்பூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

தகவலறிந்த சிறுபாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, ராஜதுரை, மதுமதி உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து சிறுபாக்கம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். 4 மாத கர்ப்பிணி பெண் கணவருடன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.






      Dinamalar
      Follow us