/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பப்பாளி பழங்கள் வரத்து அதிகரிப்பு
/
பப்பாளி பழங்கள் வரத்து அதிகரிப்பு
ADDED : மே 06, 2024 05:01 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி, : திருவண்ணாமலை, கோவை, ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில், பப்பாளி சாகுபடி அதிக அளவில் நடக்கிறது. இங்கு விளையும் பப்பாளி பழங்கள், தமிழகம், புதுச்சேரிக்கு விற்பனைக்கு வருகின்றன.
தற்போது, திருவண்ணா மலையில் பப்பாளி பழங்களின் அறுவடை களைகட்டியுள்ள சூழ்நிலையில், புதுச்சேரிக்கு பப்பாளி வரத்து அதிகரித்துள்ளது.
நகரின் பல்வேறு பகுதிகளில் டாடா ஏஸ் வாகனங்களில் நேரடியாக கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர்.
ஒரு கிலோ பப்பாளி பழம் 40 ரூபாய்க்கும், மூன்று கிலோ 100 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.