sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், பிப்ரவரி 19, 2026 ,மாசி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

மீனவர்களுக்கான இட ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும்: அனிபால் கென்னடி

/

மீனவர்களுக்கான இட ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும்: அனிபால் கென்னடி

மீனவர்களுக்கான இட ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும்: அனிபால் கென்னடி

மீனவர்களுக்கான இட ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும்: அனிபால் கென்னடி


ADDED : ஆக 14, 2024 05:54 AM

Google News

ADDED : ஆக 14, 2024 05:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : 'மீனவ மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தி இடஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும்' என, அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., பேசினார்.

மானிய கோரிக்கைகள் மீதான விவாதத்தில் அவர் பேசியதாவது:

மீனவ மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தி இட ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும். கடற்கரை மண்டல ஒழுங்காற்று ஆணையம் என்ற பெயரில் மீனவ மக்களை வெளியேற்றும் நடவடிக்கைக்கு அரசு துணை போக கூடாது.

மீன்பிடித் தடைக்கால நிவாரணத்தை 10 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி அறிவிக்க வேண்டும். மீனவர் நல வாரியம் அமைக்க வேண்டும். வம்பாகீரப்பாளையம் பகுதியில் துண்டில் வளைவு அமைத்து தர வேண்டும்.

தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயரிலான காலை சிற்றுண்டி திட்டத்தை மீண்டும் துவக்க வேண்டும். மின்துறையை தனியார்மயமாக்கும் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்.

புதுச்சேரியில் வாடகை குற்றவாளிகள் பெருகி விட்டனர். போதை பொருட்கள் விற்பவர்களின் சொத்துகளை பறிமுதல் செய்ய அரசு சட்டத் திருத்தம் கொண்டு வர வேண்டும்.

உப்பளம் தொகுதியில் 4 இடங்களில் போலீஸ் பூத் அமைக்க வேண்டும். ஏ.எப்.டி., பாரதி, சுதேசி மில்கள் மற்றும் கூட்டுறவு நுாற்பாலைகளை ஒன்றிணைத்து ஜவுளிப்பூங்கா அமைக்க வேண்டும். மிக பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை என்ற புதிய துறையை உருவாக்க வேண்டும்.

சிறுபான்மை மக்களுக்கு திட்டங்களை கொண்டு வர வேண்டும். இஸ்லாமிய மக்களுக்கு கல்வி வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.






      Dinamalar
      Follow us