sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

டாக்டர்கள் காலவரையற்ற போராட்டம் எதிரொலி ஜிப்மரில் காலை 10:00 மணி வரை மட்டுமே சிகிச்சை இயக்குனர் ராகேஷ் அகர்வால் அறிவிப்பு 

/

டாக்டர்கள் காலவரையற்ற போராட்டம் எதிரொலி ஜிப்மரில் காலை 10:00 மணி வரை மட்டுமே சிகிச்சை இயக்குனர் ராகேஷ் அகர்வால் அறிவிப்பு 

டாக்டர்கள் காலவரையற்ற போராட்டம் எதிரொலி ஜிப்மரில் காலை 10:00 மணி வரை மட்டுமே சிகிச்சை இயக்குனர் ராகேஷ் அகர்வால் அறிவிப்பு 

டாக்டர்கள் காலவரையற்ற போராட்டம் எதிரொலி ஜிப்மரில் காலை 10:00 மணி வரை மட்டுமே சிகிச்சை இயக்குனர் ராகேஷ் அகர்வால் அறிவிப்பு 


ADDED : ஆக 19, 2024 05:15 AM

Google News

ADDED : ஆக 19, 2024 05:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: ஜிப்மரில் இன்று முதல் காலை 10:00 மணி வரை மட்டுமே வெளிப்புற நோயாளிகள் சிகிச்சை பிரிவுகள் செயல்படும் என, ஜிப்மர் இயக்குனர் ராகேஷ் அகர்வால் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு;

கோால்கட்டாவில் அண்மையில் நடந்த கொடூரமான சம்பவத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் நடந்து வருகிறது. ஜிப்மர் மருத்துவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் ஜிப்மரின் வெளிப்புற நோயாளிகள் பிரிவுகளில் உள்ள டாக்டர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. இதனை கருத்தில் கொண்டு போராட்டங்கள் முடிவுக்கு வரும் வரை இன்று 19ம் தேதி முதல் வெளிப்புற நோயாளிகள் பிரிவுகள் காலை 8:00 முதல் 10:00 மணி வரை மட்டுமே இயங்கும்.

இந்த நேரத்தில் அவசரமற்ற அல்லது நீண்ட கால நோய் சிகிச்சை பெறுவோர் வெளிப்புற நோயாளிகள் பிரிவுக்கு வருவதை தவிர்க்க வேண்டும். இதனால் மருத்துவர்கள் அவசர சிகிச்சை தேவைப்படும் நோய்களை கொண்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் கவனம் செலுத்த முடியும். சில நாட்களில் போராட்டம் முடிவுக்கு வரும் என நம்புகிறோம். அதை தொடர்ந்து முழு நேரமாக வெளிப்புற சிகிச்சை சேவைகள் வழக்கம்போல் இயங்கும்.

பொதுமக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும் என்பதை புரிந்து கொள்கிறோம். இருப்பினும் மருத்துவ பராமரிப்பு அவசியம் தேவைப்படும் நபர்களின் கவனிப்பிற்கு முன்னுரிமை அளிக்க இது மேற்கொள்ளப்படுகிறது. அவசர சிகிச்சை பிரிவுகள் அனைத்தும் வழக்கம்போல் இயங்கும்.

உயிர் காக்கும் பராமரிப்பு தேவைப்படும் அனைத்து நோயாளிகளுக்கும் சரியான நேரத்தில் சிகிச்சை அளிப்பதை உறுதி செய்வோம். நோயாளிகள் மற்றும் பொதுமக்களின் நலனுக்காக சுகாதார சேவைகளை ஜிப்மர் அர்ப்பணிப்புடன் வழங்கும்.

இவ்வாறு அதில், கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us