sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

பள்ளி வாகனங்கள் ஆய்வு துவக்கம் ஒரே நாளில் 370 வாகனங்களுக்கு 'ஓகே'

/

பள்ளி வாகனங்கள் ஆய்வு துவக்கம் ஒரே நாளில் 370 வாகனங்களுக்கு 'ஓகே'

பள்ளி வாகனங்கள் ஆய்வு துவக்கம் ஒரே நாளில் 370 வாகனங்களுக்கு 'ஓகே'

பள்ளி வாகனங்கள் ஆய்வு துவக்கம் ஒரே நாளில் 370 வாகனங்களுக்கு 'ஓகே'


ADDED : ஜூன் 02, 2024 04:46 AM

Google News

ADDED : ஜூன் 02, 2024 04:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: பள்ளி, கல்லுாரி வாகனங்களில் பயணிக்கும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் பொருட்டு போக்குவரத்து துறை சார்பில் பள்ளி கல்லுாரி வாகனங்கள் ஆய்வு 2 நாள் முகாம், மேட்டுப்பாளையம் கனரக வாகன முனையத்தில் நேற்று துவங்கியது.

போக்குவரத்து ஆணையர் சிவக்குமார் முகாமை துவக்கி வைத்தார்.

வாகன ஆய்வாளர்கள் தலைமையில் 4 குழுவினர் வாகனங்களை ஆய்வு செய்தனர். அப்போது, வாகனத்தில் முதலுதவி பெட்டி, அவசர காலவழி, தீயணைக்கும் கருவி, வேககட்டுப்பாட்டு கருவி, ஜி.பி.எஸ். கருவி, உள்ளிட்ட 16 விதிமுறைகள் பின்பற்றப்படுகிறதா என ஆய்வு செய்தனர்.

ஆணையர் சிவக்குமார் கூறுகையில், 'புதுச்சேரியில் 800, காரைக்காலில் 50, மாகி 25, ஏனாமில் 25 என மொத்தம் 900 கல்வி நிறுவனங்களின் வாகனங்கள் உள்ளன.

அரசு சார்பில் சிறப்பு பஸ்கள் 78 இயக்கப்படுகிறது. முதல் நாள் முகாமிற்கு 300க்கும் மேற்பட்ட வாகனங்கள் வந்தன.

முகாமில் பங்கேற்காத வாகனங்கள் அடுத்த வாரம் ஆய்வு செய்வோம். அதன் பிறகும் ஆய்வுக்கு வராத வாகனங்களை அவர்களின் பள்ளிக்கு சென்று ஆய்வு செய்வோம்' என்றார்.






      Dinamalar
      Follow us