இளம் வழக்கறிஞர்களுக்கான ஒருங்கிணைப்பு வழிகாட்டுதல் நிகழ்ச்சி
இளம் வழக்கறிஞர்களுக்கான ஒருங்கிணைப்பு வழிகாட்டுதல் நிகழ்ச்சி
ADDED : ஜூலை 15, 2026 10:53 PM
அ நிறம் | அளவு
செஞ்சி: செஞ்சி பார் அசோசியேஷன் சார்பில் இளம் வழக்கறிஞர்களுக்கான ஒருங்கிணைப்பு மற்றும் வழிகாட்டுதல் நிகழ்ச்சி செஞ்சி தனலட்சுமி திருமண மண்டபத்தில் நடந்தது.
பார் அசோசியேஷன் தலைவர் கிருஷ்ணன் தலைமை தாங்கினார். செயலாளர் அன்புசெல்வன் வரவேற்றார். மூத்த வழக்கறிஞர்கள் ரங்கபூபதி, தேவக்குமார் முன்னிலை வகித்தனர். சார்பு நீதிபதி கதிரவன், மாவட்ட முதன்மை உரிமையியல் நீதிபதி செல்வ அரசி, கூடுதல் மாவட்ட முதன்மை உரிமையியல் நீதிபதி கார்த்திகேயன், குற்றவியல் நடுவர் வித்யா ஆகியோர் கருத்துரை வழங்கினர்.
வழக்கறிஞர்கள் சக்திராஜன், பிரவீன், மஞ்சுளா, அரிகுமார், பாபு ஆகியோர் வழக்கு சார்ந்த ஆலோசனைகளை வழங்கினர். இணை செயலாளர் அருண்குமார், நுாலகர் சின்னதுரை மற்றும் மூத்த வழக்கறிஞர்கள், பார் அசோசியேஷன் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
