sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

நல்லொழுக்கப் பயிற்சி முகாம் பள்ளி, கல்லுாரிகளுக்கு அழைப்பு

/

நல்லொழுக்கப் பயிற்சி முகாம் பள்ளி, கல்லுாரிகளுக்கு அழைப்பு

நல்லொழுக்கப் பயிற்சி முகாம் பள்ளி, கல்லுாரிகளுக்கு அழைப்பு

நல்லொழுக்கப் பயிற்சி முகாம் பள்ளி, கல்லுாரிகளுக்கு அழைப்பு


ADDED : ஜூன் 16, 2024 05:42 AM

Google News

ADDED : ஜூன் 16, 2024 05:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: மாணவர்களுக்கான, இலவச மனித வள மேம்பாட்டு மற்றும் நல்லொழுக்கப் பயிற்சி முகாமை நடத்த விரும்பும் அரசுப்பள்ளி மற்றும் கல்லுாரிகள் பதிவு செய்து கொள்ள லாம் என, இளைஞர் அமைதி மையத்தின் நிறுவனர் அரிமதி இளம்பரிதி தெரிவித்துள்ளார்.

அவர் கூறியதாவது:

மனித வளம் மற்றும் நல்லொழுக்கப் பயிற்சி முகாம் அரசு மற்றும் தனியார் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள் மற்றும் கல்லுாரிகளில் நடத்தப்பட உள்ளது.

நேர்மறை எண்ணங்கள், எதிர்மறைச் சிந்தனைகளைக் களையும் வழிமுறைகள், பேச்சாற்றல் கலை, ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., உள்ளிட்ட பல்வேறு போட்டித் தேர்வுகளைத் தன்னம்பிக்கையோடு எழுதும் திறன் மேம்பாடு, கூடுதல் திறன் வளர்ப்பு, வாசிப்புப் பழக்கம், மது மற்றும் போதைப் பொருள்களால் விளையும் ஆபத்துக்கள் மற்றும் தலைவர்களுக்கான தகுதிகளை வளர்த்துக் கொள்ளுதல் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் பயிற்சி முகாம் நடத்தப்பட உள்ளது.

இந்த முகாமை நடத்த விரும்பும், அரசு பள்ளி, கல்லுாரி தலைமையாசிரியர்களும், முதல்வர்களும், இளைஞர் அமைதி மையம், 72 முதல் குறுக்குத் தெரு, ஆனந்தரங்கப் பிள்ளை நகர், புதுச்சேரி 605 008 என்ற முகவரியில் தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us