/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரி கவர்னராக கைலாஷ்நாதன் பதவியேற்பு
/
புதுச்சேரி கவர்னராக கைலாஷ்நாதன் பதவியேற்பு
ADDED : ஆக 07, 2024 10:09 PM

புதுச்சேரி:புதுச்சேரியில் கவர்னராக இருந்த ராதாகிருஷ்ணன், மஹாராஷ்டிராவிற்கு மாற்றப்பட்டார். அதைத் தொடர்ந்து, கேரளாவைச் சேர்ந்த, ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி கைலாஷ்நாதன், புதுச்சேரி கவர்னராக நியமிக்கப்பட்டார். நேற்று காலை, புதுச்சேரி கவர்னர் மாளிகையில் பதவியேற்பு விழா நடந்தது.
தலைமை செயலர் சரத் சவுகான், புதிய கவர்னர் கைலாஷ்நாதன் நியமிக்கப்பட்டதற்கான ஜனாதிபதி உத்தரவை வாசித்தார். சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி பொறுப்பு கிருஷ்ணகுமார், புதிய கவர்னருக்கு பதவி பிரமாணம், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார்.
போலீசாரின் வரவேற்பு மரியாதை ஏற்று கொண்ட புதிய கவர்னருக்கு, முதல்வர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள் நமச்சிவாயம் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.
கவர்னராக பொறுப்பேற்றதும், முதல் கையெழுத்தாக முதியோர், விதவை, முதிர்கன்னிகள், மூன்றாம் பாலினத்தவருக்கான மாதாந்திர உதவித்தொகை வழங்குவதற்கான கோப்பில் கவர்னர் கையெழுத்திட்டார்.