/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கொத்தனார் சாவு போலீசார் விசாரணை
/
கொத்தனார் சாவு போலீசார் விசாரணை
ADDED : ஏப் 13, 2024 04:22 AM
பாகூர்: தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கொத்தனார் திடீரென இறந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
பாகூர் அடுத்த கீழ்பரிக்கல்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் சண்முகம், 38; கொத்தனார். இவரது மனைவி பிருந்தா. இவர்களுக்கு இரண்டு மகள்களும் உள்ளனர். நேற்று முன்தினம் காலை வீட்டில் இருந்த சண்முகம் தொடர்ந்து வாந்தி எடுத்தார். உறவினர்கள், அவரை பாகூர் தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு, அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார்.
இதையடுத்து, சண்முகத்தின் இறப்பில் சந்தேகம் உள்ளதாக அவரது மைத்துனர் ஆறுமுகம், பாகூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன்பேரில், சப் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் சந்தேகம் மரணம் பிரிவின் கீழ், வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறார்.

