ADDED : மே 16, 2026 10:32 PM
அ நிறம் | அளவு
காரைக்கால்: காரைக்காலில் பூனை மற்றும் நாய்க்கு விஷம் வைத்த நபரை போலீசார் கைது செய்தனர்.
காரைக்கால், நேதாஜி நகரை சேர்ந்தவர் இருதயராஜ், 35: தனியார் விலங்குகள் அறக்கட்டளை நடத்தி வருகிறார். இவர், நாய், பூனை உள்ளிட்ட செல்ல பிராணிகளை வளர்த்து வருகிறார். கடந்த 14ம் தேதி இருதயராஜ் வளர்த்த ஐந்து பூனைகள் மற்றும் ஒரு நாய் இறந்தது. இதுக்குறித்து இருதயராஜ் கொடுத்த புகாரின் பேரில், நகர காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி., கேமராவில் பதிவான கட்சிகள் மூலம் விசாரணையில் ஈடுபட்டனர். அதில், அதேப் பகுதியை சேர்ந்த பஷீர், 45, என்பவர் பூனை மற்றும் நாய்க்கு விஷம் வைத்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.
