sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

கண் அறுவை சிகிச்சைக்கு சென்ற பெண் மாயம்

/

கண் அறுவை சிகிச்சைக்கு சென்ற பெண் மாயம்

கண் அறுவை சிகிச்சைக்கு சென்ற பெண் மாயம்

கண் அறுவை சிகிச்சைக்கு சென்ற பெண் மாயம்


ADDED : ஜூலை 04, 2024 03:36 AM

Google News

ADDED : ஜூலை 04, 2024 03:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரியாங்குப்பம், : கண் அறுவை சிகிச்சைக்காக புதுச்சேரி சென்ற மனைவியை காணவில்லை என கணவர் போலீசில் புகார் செய்துள்ளார்.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே உள்ள கீழப்பரசலுாரை சேர்ந்தவர் கலியபெருமாள். இவரது மனைவி சரஸ்வதி, 58. இவர், புதுச்சேரி, தவளக்குப்பம் தனியார் கண் மருத்துவமனை மூலம் தரங்கம்பாடியில் நடந்த கண் சிகிச்சை முகாமில் பங்கேற்றார். அப்பகுதியை சேர்ந்தவர்கள், கண் அறுவை சிகிச்சை செய்வதற்காக, கடந்த 29ம் தேதி, அங்கிருந்து ஒரு பஸ்சில், தவளக்குப்பம், கண் மருத்துவமனை சார்பில், அழைத்து வரப்பட்டனர்.

சரஸ்வதி, கண் அறுவை சிகிச்சை செய்வதற்காக, அந்த பஸ்சில் வந்து மருத்துவமனையில் தங்கியுள்ளார். அவர் கண் அறுவை சிகிச்சை செய்யாமல் மாயமாகியுள்ளார். அவருடன் வந்தவர்கள், சரஸ்வதியின் கணவருக்கு தகவல் தெரிவித்தனர். அதையடுத்து, அவரது கணவர், மருத்துவமனை மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடியும், கிடைக்கவில்லை.

இதுகுறித்து, புகாரின் பேரில், தவளக்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us