sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ காட்டில் மர்ம நபர்கள் தீ வைப்பு

காட்டில் மர்ம நபர்கள் தீ வைப்பு

காட்டில் மர்ம நபர்கள் தீ வைப்பு


ADDED : மே 02, 2024 11:45 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 02, 2024 11:45 PM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வில்லியனுார்: சேதராப்பட்டு அருகே சிறப்பு பொருளாதார மண்டலத்திற்கு கையகப்படுத்திய பகுதியில் உள்ள காட்டில் மர்ம நபர்கள் தீ வைத்த நிலையில், தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர்.

சேதராப்பட்டு அடுத்த கரசூர் கிராமத்தில் 800 ஏக்கரில் சிறப்பு பொருளாதார மண்டலம் அமைக்க அரசு கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் நிலத்தை கையப்படுத்தினர். பொருளாதார மண்டலம் அமைக்கும் திட்டம் தற்காலிகமாக கிடப்பில் போடப்பட்டு பிப்டிக் நிர்வாக்திடம் இடத்தை கொடுத்தனர்.

இந்த நிலப் பகுதியில் மரங்கள் வளர்ந்து தற்போது காடுகளாய் மாறி உள்ளது. கரசூரில் இருந்து வானுார் சாலையில் காடுபோன்ற இடத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவில் மர்ம நபர்கள் தீ வைத்தனர்.

காடு தீப்பற்றி எரிந்தது. இது குறித்து நேற்று காலை அவ்வழியாக சென்றவர்கள் சேதராப்பட்டு போலீஸ் மற்றும் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

அதனை தொடர்ந்து சேதராப்பட்டு தீயணைப்பு நிலைய முன்னணி தீயணைப்பாளர் வெங்கடேசன், வைத்தியநாதன் சக்திவேல் உள்ளிட்ட வீரர்கள் ஒரு மணிநேரம் போராடி தீயை அணைத்தனர்.

இச் சம்பவம் குறித்து சேதராப்பட்டு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us