sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ கடற்கரையில் தவறவிட்ட மொபைல் போன் உரியவரிடம் ஒப்படைப்பு 

கடற்கரையில் தவறவிட்ட மொபைல் போன் உரியவரிடம் ஒப்படைப்பு 

கடற்கரையில் தவறவிட்ட மொபைல் போன் உரியவரிடம் ஒப்படைப்பு 


ADDED : மே 27, 2026 07:51 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 27, 2026 07:51 PM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரி கடற்கரையில் தவறவிட்ட மொபைல் போனை, லைப்கார்ட் வீரர்கள் போலீசாருடன் இணைந்து, உரியவரிடம் ஒப்படைத்தனர்.

புதுச்சேரி கடற்கரை பகுதியில் லைப்கார்ட் ரமேஷ் மற்றும் சாந்தகுமார் நேற்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். காலை 9:00 மணிக்கு கடற்கரை சாலை, காந்தி சிலை அருகே விலை உயர்ந்த மொபைல் போன் ஒன்று கீழே கிடந்தது.

அதைகண்ட ரமேஷ் மற்றும் சாந்தகுமார், மொபைல் போனை எடுத்து, அங்கு ரோந்து பணியில் இருந்த பெரியக்கடை போலீசாரிடம் ஒப்படைந்தனர். இதையடுத்து, போலீசார் மொபைல் போன் யாருடையது என, விசாரணை நடத்தினர். அதில், ஆந்திராவை சேர்ந்த ஸ்வேதா என்பவருடையது என்பதும், அவர் குடும்பத்துடன் புதுச்சேரிக்கு சுற்றுலா வந்தபோது, மொபைல் போனை தவறவிட்டதும் தெரியவந்தது.

இதையடுத்து, போலீசார் மொபைலை தவறவிட்ட ஸ்வேதாவை காந்தி திடலுக்கு வரவழைத்து, லைப்கார்ட் ரமேஷ், சாந்தகுமார் ஆகியோர் மூலம் போனை ஒப்படைத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us