ADDED : மார் 29, 2024 03:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரியாங்குப்பம்: தவளக்குப்பத்தில் நகை வாங்கி கொண்டு ஜிபே மூலம் பணம் அனுப்பியதாக ஏமாற்றி சென்றவரை போலீசார் தேடிவருகின்றனர்.
தவளக்குப்பம் நான்குமுனை சந்திப்பு பகுதியில் நகைக்கடை நடத்தி வருபவர் சிம்னாரம்;42; இவரது கடைக்கு கடந்த 7ம் தேதி 35வயது மதிப்புள்ள டிப் டாப் ஆசாமி ஒருவர் வந்தார். 1 சவரன் தங்க நகை வாங்கினார். அதற்கான பணத்தை வேறு ஒரு நபர் மூலம் ஜிபே அனுப்பியுள்ளதாக தவறான குறுச்செய்தியை கடைகாரரிடம் காட்டி நகையை வாங்கிச் சென்றார். .
பின்னர் கடை உரிமையாளர், தனது மொபைல் ஜி.பே.,வில் பார்த்த போது, பணம் வராமல் இருந்துள்ளது. இதுகுறித்து, நகைக்கடை உரிமையாளர் புகாரின் பேரில் தவளக்குப்பம் போலீசார் நுாதன முறையில் மோசடியில் ஈடுபட்ட ஆசாமியை தேடிவருகின்றனர்.

