sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

வெங்கடேஸ்வரா கல்லுாரியில் தேசிய மருத்துவ மாநாடு

/

வெங்கடேஸ்வரா கல்லுாரியில் தேசிய மருத்துவ மாநாடு

வெங்கடேஸ்வரா கல்லுாரியில் தேசிய மருத்துவ மாநாடு

வெங்கடேஸ்வரா கல்லுாரியில் தேசிய மருத்துவ மாநாடு


ADDED : ஆக 02, 2024 11:39 PM

Google News

ADDED : ஆக 02, 2024 11:39 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வில்லியனுார் : அரியூர் வெங்கடேஸ்வரா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆராய்ச்சி மூலம் மருத்துவத்தை மாற்றுதல் குறித்த தேசிய அளவிலான மாநாடு நடந்தது.

அரியூர் வெங்கடேஸ்வரா மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அங்கீகார தரவு மேலாண்மை அமைப்பு மற்றும் ஆராய்ச்சி துறை சார்பில், 'ஆராய்ச்சி மூலம் மருத்துவத்தை மாற்றுதல்- வாய்ப்புகள் மற்றும் சவால்கள்' என்ற தலைப்பில் தேசிய அளவிலான மாநாடு நடந்தது.

டில்லி ஆர்.எம்.எல். மருத்துவமனை டாக்டர் முத்துக்குமார், டில்லி எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டர் அருண்குமார் மற்றும் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டர் சுரேஷ் ஆகியோர் பேசினார்.

நிகழ்ச்சியில் டாக்டர் நிரஞ்சலி தேவராஜ், வெங்கடேஸ்வரா முதன்மை இயக்க அதிகாரி வித்யா, கல்லுாரி இயக்குனர் ரத்தினசாமி, ஆராய்ச்சி துறை இயக்குனர் பாபாதாசரி மற்றும் மருத்துவ கண்காணிப்பாளர் லோகநாதன் சிறப்புரையாற்றினர்.

மாநாட்டில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 350க்கும் மேற்பட்ட மருத்துவர்கள், செவிலியர், உடற்பயிற்சி சிகிச்சை, பாராமெடிக்கல் மாணவர்கள், பேராசிரியர்கள், இணை மற்றும் உதவி பேராசிரியர்கள் கலந்துகொண்டனர். ஏற்பாடுகளை டாக்டர் லதா மற்றும் டாக்டர் ரேவதி ஆகியோர் செய்திருந்தனர்.






      Dinamalar
      Follow us