sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

சுற்றுலா வந்துள்ள ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., புதுச்சேரிக்கு தேவையா? எதிர்க்கட்சி  தலைவர் சிவா சரமாரி கேள்வி

/

சுற்றுலா வந்துள்ள ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., புதுச்சேரிக்கு தேவையா? எதிர்க்கட்சி  தலைவர் சிவா சரமாரி கேள்வி

சுற்றுலா வந்துள்ள ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., புதுச்சேரிக்கு தேவையா? எதிர்க்கட்சி  தலைவர் சிவா சரமாரி கேள்வி

சுற்றுலா வந்துள்ள ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., புதுச்சேரிக்கு தேவையா? எதிர்க்கட்சி  தலைவர் சிவா சரமாரி கேள்வி


ADDED : ஆக 14, 2024 05:58 AM

Google News

ADDED : ஆக 14, 2024 05:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : மக்கள் பணி செய்யாமல் சுற்றுலா போல வந்துள்ள ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., புதுச்சேரிக்கு தேவையா என்று எதிர்கட்சி தலைவர் சிவா உள்ளிட்ட எம்.எல்.ஏக்கள் சரமாரியாக கேள்வி எழுப்பினர்.

கேள்வி நேரத்தின்போது நடந்த விவாதம்

எதிர்க்கட்சி தலைவர் சிவா: புதுச்சேரிக்கு தனியாக தேர்வாணையம் அமைக்க அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கை என்ன? புதுச்சேரி தேவைக்கு அதிகமாக ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக மத்திய அரசிடம் ஆட்சேபனை ஏதேனும் தெரிவிக்கப்பட்டுள்ளதா?

முதல்வர் ரங்கசாமி: மாநிலத்தில் தற்போது 14 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள், ஒரு பயிற்சி ஐ.ஏ.எஸ்., அதிகாரியும், 9 ஐ.பி.எஸ்., அதிகாரியும் பணியாற்றி வருகின்றனர். டி.ஜி.பி., பதவி டில்லி நிர்வாகத்தின் கணக்கில் அடங்கும். இந்த அதிகாரிகள் சட்டத்திற்குட்பட்டே நியமிக்கப்படுகின்றனர். எனவே ஆட்சேபனை தெரிவிக்க வேண்டிய நிலை ஏற்படவில்லை.

எதிர்க்கட்சி தலைவர் சிவா: கடந்த 1996 ஆண்டு காங்., ஆட்சி காலத்தில் குறைவாக இருந்தனர். ஆனால் வேலை நடந்தது. இப்போது அதிகமாக அதிகாரிகள் இருந்தும், அப்போது நடந்த வேலை கூட நடக்கவில்லை. இவர்களால் அரசுக்குதான் செலவு.

முதல்வர் ரங்கசாமி: யாரெல்லாம் வேலை செய்கின்றார்களோ அவர்களிடம் வேலை வாங்குகின்றோம். வேலை செய்யும் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளும் இருக்கின்றனர்.

எதிர்கட்சி தலைவர் சிவா: இங்கு வரும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., அதிகாரிகளுக்கு புதுச்சேரி மாநிலம் சுற்றுலா இடம்போல், விருந்தினர் மாளிகை போல் ஆகிவிட்டது.

இங்கு அவர்கள் மக்களுக்கு பணியாற்ற வரவில்லை. 5 அதிகாரிகளை தவிர்த்து பார்த்தால் எல்லோரும் சுற்றுலாவுக்கு வந்தவர்கள் போல் இருக்கின்றனர். அதிகாரிகளை தேடி சென்றாலும் சந்திப்பது கூட இல்லை. அந்த சீட்டில் கூட இல்லை. வெளிநாடு சென்றவர்கள் உள்ளனர். அந்த லிஸ்ட் தரவா.

வைத்தியநாதன்(காங்.,): மக்கள் பிரதிநிதியான நாங்கள் மக்கள் பணிக்கு ஆட்களை கேட்டால் தர மறுக்கின்றீர்கள். ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., அதிகாரிகள் வீட்டில் எத்தனை பேர் வேலை செய்கின்றனர் தெரியுமா.. ஒவ்வொரு வீட்டில் 10 பேராவது வேலை செய்கின்றனர்.

நாஜிம்(தி.மு.க.,): நம் பக்கத்தில் உள்ள விழுப்புரம் மாவட்டத்தில் ஒரு ஐ.பி.எஸ்., அதிகாரி அனைத்தையும் பார்க்கிறார். ஆனால் இங்கு 26 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் வேலை செய்யவில்லை. இதனை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.

இவ்வாறு விவாதம் நடந்தது.






      Dinamalar
      Follow us