/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தங்கையின் கணவரை வெட்டிய மைத்துனர் உட்பட 2 பேருக்கு வலை
/
தங்கையின் கணவரை வெட்டிய மைத்துனர் உட்பட 2 பேருக்கு வலை
தங்கையின் கணவரை வெட்டிய மைத்துனர் உட்பட 2 பேருக்கு வலை
தங்கையின் கணவரை வெட்டிய மைத்துனர் உட்பட 2 பேருக்கு வலை
ADDED : செப் 05, 2024 07:22 PM
புதுச்சேரி:தங்கையின் கணவர் மற்றும் உறவினரை கத்தியால் வெட்டிய மைத்துனர் உட்பட இருவரை போலீசார் தேடிவருகின்றனர்.
லாஸ்பேட்டை, நரிக்குறவர் காலனியை சேர்ந்தவர் மருதுபாண்டியன்,23. இவர் குடும்ப பிரச்னையில் தனது மனைவியை விட்டு பிரிந்தார். மருதுபாண்டியன் ஒரு குற்ற வழக்கு தொடர்பாக, கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தார்.
மதுபாண்டியனின் மைத்துனர் ஜே.ஜே.,நகரை சேர்ந்தவர் விக்ரம், 27. இவர், கடந்த 3ம் தேதி மருதுபாண்டியன் வீட்டிற்கு சென்று தனது தங்கையுடன் சேர்ந்து வாழ வேண்டும் என, பேசினார். அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
ஆத்திரமடைந்த விக்ரம், அவரது நண்பர் செல்லா ஆகியோர் மருதுபாண்டியனை கத்தியால் வெட்டினர். தடுக்க வந்த, அவரது உறவினர் ரகுவையும் வெட்டி விட்டு தப்பிச் சென்றனர். காயமடைந்த, இருவரும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மருதுபாண்டியன் புகாரின்பேரில், லாஸ்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து, விக்ரம் அவரது நண்பர் செல்லா ஆகியோரை தேடி வருகின்றனர்.