ADDED : மே 02, 2024 11:43 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: முன்விரோதத்தில் பெண்ணை தாக்கிய நால்வரை போலீசார் தேடி வருகின்றனர்.
புதுச்சேரி, பிரியதர்ஷினி நகரை சேர்ந்தவர் ஜெயக்கொடி, 42. இவரது எதிர் வீட்டை சேர்ந்தவர் சஞ்சய். இருவருக்கும் முன்விரோதம் உள்ளது. வீட்டு வாசலில் நின்றிருந்த ஜெயக்கொடியை, சஞ்சய், விஷ்வா, அஜித், ஞானவேல் ஆகியோர் ஆபாசமாக திட்டி, தாக்கினர்.
புகாரின் பேரில், ஒதியஞ்சாலை போலீசார் வழக்கு பதிந்து, சஞ்சய் உட்பட 4 பேரை தேடி வருகின்றனர்.