ADDED : மே 22, 2024 06:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரியாங்குப்பம் : மனைவியை தாக்கிய கணவரை போலீசார் தேடிவருகின்றனர்.
புதுச்சேரி புவன்கரே வீதி, உழந்தை கீரப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் முருகன். இவர் தினமும் மது குடித்துவிட்டு வருவதை அவரது மனைவி ஸ்ரீதேவி தட்டிக்கேட்டுள்ளார். இதனால் இவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில், நேற்று மீண்டும் இவர்களுக்கிடையே ஏற்பட்ட தகராறில், ஆத்திரமடைந்த, முருகன், மனைவியை கட்டையால் தாக்கினார். அதில், பலத்த காயமடைந்த, அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். முதலியார்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

