sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

4 பேரிடம் ரூ.3.10 லட்சம்  மோசடி செய்த கும்பலுக்கு வலை

/

4 பேரிடம் ரூ.3.10 லட்சம்  மோசடி செய்த கும்பலுக்கு வலை

4 பேரிடம் ரூ.3.10 லட்சம்  மோசடி செய்த கும்பலுக்கு வலை

4 பேரிடம் ரூ.3.10 லட்சம்  மோசடி செய்த கும்பலுக்கு வலை


ADDED : செப் 15, 2024 06:49 AM

Google News

ADDED : செப் 15, 2024 06:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : புதுச்சேரியில் 4 பேரிடம் 3.10 லட்சம் மோசடி செய்த மர்ம கும்பலை சைபர் கிரைம் போலீசார் தேடிவருகின்றனர்.

புதுச்சேரியை சேர்ந்தவர் பேபிதா. இவரை தொடர்பு கொண்ட நபர், வீட்டில் இருந்தபடியே, ஆன்லைன் மூலம் சம்பாதிக்கலாம் என கூறினார் அதை நம்பி, அவர், 1.45 லட்சம் ரூபாயை முதலீடு செய்தார். அந்த நபர் கொடுக்கப்பட்ட பணியை முடித்து, அவர் செய்த லாப பணத்தை அவரால் எடுக்க முடியவில்லை. பின் அந்த நபரை தொடர்பு கொள்ள முடியாமல் அவர் ஏமாந்தார்.

மேலும், அரியாங்குப்பத்தை சேர்ந்தவர் வெற்றிவேல், இவரை தொடர்பு கொண்ட நபர், பிரான்சில் வேலை வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறினார். அதை நம்பி அவர் முன் தொகையாக 1 லட்சம் ரூபாய் அனுப்பினார். பின்னர் அந்த நபரை தொடர்பு கொள்ள முடியாமல் மோசடி நபரிடம் ஏமாந்தார். திருக்கனுார் பகுதியை சேர்ந்தவர் இந்திராகுமார், இவரிடம் மொபைல் போன் மூலம் பேசிய மர்ம நபர், பங்கு சந்தையில் முதலீடு செய்தால், அதிக லாபம் சம்பாதிக்கலாம் என கூறினார். அதை நம்பி, அவர் 55 ஆயிரம் ரூபாயை அனுப்பி ஏமாந்தார்.

மேலும், வில்லியனுார் பகுதியை சேர்ந்தவர் வெங்கடபதி, இவர் 10 ஆயிரம் ரூபாய் அனுப்பி மர்ம நபரிடம் ஏமாந்தார்.

புகார்களின் பேரில், சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிந்து, மர்ம கும்பலை தேடிவருகின்றனர்.






      Dinamalar
      Follow us