ADDED : மே 20, 2024 09:22 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காட்டேரிக்குப்பம்: லிங்காரெட்டிப்பாளையத்தில் பொது இடங்களில் ஆபாசமாக பேசி ரகளையில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
காட்டேரிக்குப்பம் உதவி சப் இன்ஸ்பெக்டர் ராஜன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, லிங்காரெட்டிப்பாளையம் சர்க்கரை ஆலை அருகே மது போதையில் ஆபாசமாக பேசி, பொதுமக்களிடம் தகராறில் ஈடுபட்டுக் கொண்டிருந்த விழுப்புரம் பகுதியை சேர்ந்த சுப்ரமணியன், 38; என்பவரை போலீசார் கைது செய்தனர்.

