ADDED : மே 17, 2026 07:50 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: மூதாட்டி மாயமானது குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
புதுச்சேரி, டி.என். பாளையம் சேர்ந்தவர் சீனிவாசன் மனைவி பழனியம்மாள், 65. இவர் கணவரை பிரிந்து தனது தங்கை செல்வி வீட்டில் வசித்து வந்தார். சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர். கடந்த 13ம் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்ற இவர், திரும்பி வரவில்லை. எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்த புகாரின்பேரில் தவளக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்.
