sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 17, 2025 ,மார்கழி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

அன்னை புதுச்சேரி வந்த தினம் அரவிந்தர் அறை தரிசனத்திற்கு அனுமதி

/

அன்னை புதுச்சேரி வந்த தினம் அரவிந்தர் அறை தரிசனத்திற்கு அனுமதி

அன்னை புதுச்சேரி வந்த தினம் அரவிந்தர் அறை தரிசனத்திற்கு அனுமதி

அன்னை புதுச்சேரி வந்த தினம் அரவிந்தர் அறை தரிசனத்திற்கு அனுமதி


ADDED : ஏப் 23, 2024 11:38 PM

Google News

ADDED : ஏப் 23, 2024 11:38 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : அன்னை இறுதியாக புதுச்சேரிக்கு வந்த 104 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அரவிந்தர் அறை பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்படுகிறது.

அன்னை என்று அழைக்கப்படும் மிர்ரா அல்ஃபாஸா 1878 ஆண்டு பிரான்ஸ் நாட்டில் பிறந்தார். 1914 ம் ஆண்டு இந்தியா வந்து அரவிந்தரை புதுச்சேரியில் முதன் முதலாக சந்தித்தார். அதன் பின் நாடு திரும்பிய அன்னை, அரவிந்தரின் யோக முறைகள் இவரைக் கவர்ந்ததால் மீண்டும் 1920ஆம் ஆண்டு ஏப்ரல்,24ம் தேதி இறுதியாக இந்தியா வந்து புதுச்சேரியிலேயே தங்கி அரவிந்தரின் ஆன்மிக, யோகப் பணிகளுக்கு உறுதுணையாக இருந்தார்.

மேலும் அரவிந்தர் ஆசிரமம் மற்றும் ஆரோவில் என்ற சர்வதேச நகரை உருவாக்கினார். அதையொட்டி ஒவ்வொரு ஆண்டும் அன்னை இறுதியாக புதுச்சேரி வந்த நினைவு தினம் புதுச்சேரி அரவிந்தர் ஆசிரமத்தில் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

இன்று 104 ஆம் ஆண்டு தினத்தையொட்டி மரைன் வீதியில் உள்ள அரவிந்தர் ஆசிரமத்தில் காலை 6 மணிக்கு கூட்டு தியானம் நடக்கிறது.

அதனைத் தொடர்ந்து அதிகாலை ஐந்து மணி முதல் பகல் 12 மணி வரை அரவிந்தர் வாழ்ந்த அறையை மட்டும் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர்.






      Dinamalar
      Follow us