/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சாலை விபத்தில் ஒருவர் பலி திருக்கோவிலுார் அருகே மறியல்
/
சாலை விபத்தில் ஒருவர் பலி திருக்கோவிலுார் அருகே மறியல்
சாலை விபத்தில் ஒருவர் பலி திருக்கோவிலுார் அருகே மறியல்
சாலை விபத்தில் ஒருவர் பலி திருக்கோவிலுார் அருகே மறியல்
ADDED : ஏப் 15, 2024 04:54 AM
திருக்கோவிலுார், : திருக்கோவிலுார் அருகே சாலை விபத்தில் ஒருவர் பலியானதை கண் டித்து, கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலுார் அடுத்த குலதீபமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜா, 45; இவர், நேற்று காலை அவரது வயலுக்கு சென்றபோது திருக்கோவி லுார் - திருவண்ணாமலை சாலையில், பாபா கோவில் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே இறந்தார்.
மணலுார்பேட்டை போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிந்தனர்.
இந்நிலையில் நேற்று மாலை 6:30 மணியளவில் விபத்தில் இறந்த ராஜாவின் உறவினர்கள் விபத்தை ஏற்படுத்திய வாகனத்தை கண்டறிந்து, குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தினர்.
உடலை வாங்க மறுத்து திருக்கோவிலுார் - மணலுார்பேட்டை சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து, 7:00 மணியளவில் மறியலை விலக்கி கொண்டனர்.

