ADDED : ஆக 03, 2024 11:43 PM

அ நிறம் | அளவு
புதுச்சேரி: கணபதிசெட்டிக்குளம் அரசு தொடக்கப் பள்ளியில், முன் மழலையர் கல்வி செயல்பாட்டு மையம் திறப்பு விழா நடந்தது.
பள்ளி தலைமையாசிரியை முனியம்மாள் தலைமை தாங்கினார். பள்ளிக்கல்வி துணை ஆய்வாளர் குலசேகரன், குத்து விளக்கேற்றி கல்வி செயல்பாட்டு மையத்தை திறந்து வைத்தார். அஸிம் பிரேம்ஜி கல்வி தொண்டு நிறுவன செல்வம், மையத்தின் செயல்பாடுகள் குறித்து பேசினார்.
தொடர்ந்து, மாணவர்களுக்கான விளையாட்டு சீருடை, டைரி, அடையாள அட்டை உள்ளிட்டவை வழங்கப்பட்டன. நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஆசிரியர்கள் மரகதம், பிருந்தா, ஜனார்த்தனன், கஜலட்சுமி, வடிவுக்கரசி, சுகந்தி, புவனேஸ்வரி ஆகியோர் செய்திருந்தனர்.
