ADDED : ஆக 03, 2024 04:31 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : இடையார்பாளையம் அரசு தொடக்கப் பள்ளியில், உல்லாஸ் கற்றல் மையம் திறப்பு விழா நடந்தது. நிகழ்ச்சியை, தலைமை ஆசிரியை சுமதி துவக்கி வைத்தார். ஆசிரியர் லட்சுமி வரவேற்றார்.
ஆசிரியை மகாஸ்ரீ கல்வியின் முக்கியத்துவம் குறித்து விளக்க உரையாற்றினார். நிகழ்ச்சியில், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், பெற்றோர், ஆசிரியர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதற்கான ஏற்பாடுகளை ஆசிரியைகள் மங்கள சுந்தரி, அமுதா, மகாலட்சுமி ஆகியோர் மேற்கொண்டனர்.