sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

சிவசுப்ரமணிய சுவாமி கோவிலில் பங்குனி உத்திர தேர் திருவிழா

/

சிவசுப்ரமணிய சுவாமி கோவிலில் பங்குனி உத்திர தேர் திருவிழா

சிவசுப்ரமணிய சுவாமி கோவிலில் பங்குனி உத்திர தேர் திருவிழா

சிவசுப்ரமணிய சுவாமி கோவிலில் பங்குனி உத்திர தேர் திருவிழா


ADDED : மார் 23, 2024 11:39 PM

Google News

ADDED : மார் 23, 2024 11:39 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வில்லியனுார: வில்லியனுார் வள்ளி தேவசேனா சிவசுப்ரமணிய கோவிலில் பங்குனி உத்திர தேர் திருவிழா நேற்று நடந்தது.

வில்லியனுார் சுந்தரமூர்த்தி வினாயகபுரம் வள்ளிதேவ சேனா சிவசுப்ரமணிய சுவாமி கோவிலில் பங்குனி உத்திர விழா கடந்த 14ம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கியது. தொடர்ந்து தினசரி காலை 10:30 மணியளவில் சிறப்பு அபிேஷகம், 11:30 மணியளவில் அன்னதானம் வழங்கி வருகின்றனர்.

22ம் தேதி திருக்கல்யாண உற்சவம் நடந்தது. தேர்திருவிழா நேற்று நடந்தது. காலை 8:30 மணியளவில் சிறப்பு அபிேஷகம், தொடர்ந்து தேரோட்டத்தை வேளாண் அமைச்சர் தேனீ ஜெயக்குமார், எதிர்க்கட்சி தலைவர் சிவா ஆகியோர் வடம் பிடித்து துவக்கி வைத்தனர்.

கோவிலில் இருந்து துவங்கிய தேர் வில்லியனுார் மாட வீதிகள் வழியாக மீண்டும் கோவிலை வந்தடைந்தது. இன்று (24ம் தேதி) இரவு பங்குனி உத்திர விழா, நாளை இரவு 7:00 மணியளவில் ஊஞ்சல் உற்சவம், 26ம் தேதி விடையாற்றி உற்சவம் நடக்கிறது.

விழா ஏற்பாடுகளை கோவில் அர்ச்சகர் பாலசுப்ரமணிய குருக்கள் தலைமையில் விழா குழுவினர், உற்சவதாரர்கள் செய்துவருகின்றனர்.






      Dinamalar
      Follow us